அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட 100 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுர நகரின் பல பகுதிகளிலும் முறையற்ற வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 358 பேர் இவ்வாறு பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேக நபர்களில் 100 பேர் மாணவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் மேலதிக வகுப்புக்கு செல்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் வீடுகளில் இருந்து சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்கள், பெற்றோரின் முன்னிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment