Posts

Showing posts from February, 2020

இ்ளைஞர் பாராளுமன்றம் ஒர் விரிவான பார்வை.

Image
முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்) சிறந்த சமூக சிந்தனை மிக்கதுமான, சிறந்த ஆளுமை திறன் மிக்கதுமான ஓர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்கான தெனிப்பொருளின் கீழ் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் Sri Lanka Youth ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டதே இளைஞர் பாராளுமன்றம். இந்த இளைஞர் பாராளுமன்றமானது இவ்வருடமும் அரங்கேரி உள்ளது. மேலும் மனித குலத்தின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த, நிறைவான ஆளுமையைக் கொண்ட, ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட நாட்டுப்பற்றுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். இனம், மதம், மொழி, அரசியல் பேதங்களின்றி அனைத்து இளைஞர்களும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படத்தக்க விதத்தில் அவர்களிடையே ஒற்றுமையையும், நட்பையும், ஒத்துழைப்பு மனப்பான்மையையும் கட்டி எழுப்புதல். இளைஞர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். தேசிய அபிவிருத்திக்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, தேவைப்பாடுகள் தொடர்பான விளக்கத்தை இளம் சமுத்தாயத்தினருக்குப் பெற்றுக்