Posts

ஹொரவப்பொத்தானையில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 88 சாரதிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

Image
ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதத்தினுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 88 சாரதிகளுக்கு கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் மாலிந்த ஹர்ஷன த அல்விஸ் 29 இலட்சத்து 2 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக ஜூலை மாதம் கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்திய 32 சாரதிகளுக்கு 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா அபராதமும் ஆகஸ்ட் மாதம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சாரதிகளுக்கு 8 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் செப்டம்பர் மாதம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதி மன்றில் ஆஜர்படுத்திய சந்தேக நபர்களான 28 சாரதிகளுக்கு 9 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன. ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்னவின் ஆலோசனையின் கீழ் போக்கு வரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேகமாக பரவி வரும் போலி செய்தி... ஹொரவ்பொத்தான வாழ் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

Image
இலங்கையில் மிகப் பெரிய உயிருள்ள யானையாகக் கருதப்படும் 'கல்கமுவே காவந்திசா' என்ற யானை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டு கடந்த நாட்களில் பல பேஸ்புக் பக்கங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மிகப் பெரிய உயிருள்ள யானையான 'கல்கமுவே காவந்திசா யானை' ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்!  "கல்கமுவா காவந்திசா யானையின் உயிருக்கு குரல் எழுப்பு" என்ற கருப்பொருளின் கீழ் ஏராளமான சமூக ஊடக பயனர்களிடையே பரவி வருகிறது. ஒரே கருத்தை வழங்கும் பதிவுகள் பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் காண முடிகிறது.  இது குறித்த உண்மைகளை உறுதிப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஊடகப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது கல்கமுவாவிலிருந்து காவந்திசா என்ற யானையை ஹொரவ்பொத்தான யானைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தலைமை ஊடக அதிகாரி கூறினார்.  இது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க த

அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!

Image
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட 100 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுர நகரின் பல பகுதிகளிலும் முறையற்ற வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 358 பேர் இவ்வாறு பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர்களில் 100 பேர் மாணவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தனியார் மேலதிக வகுப்புக்கு செல்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் வீடுகளில் இருந்து சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்கள், பெற்றோரின் முன்னிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட குறித்த மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பழக்கத்துக்கும் அடிமையாகிய

ஹொரவ்பொத்தான பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Image
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் வலஹவித்தவெவ பகுதியில் மீன்பிடிக்க சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான லத்தீப் ரஹ்மத்துல்லா(26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடிக்குளம் குளத்துக்கு மீன் பிடிக்க சென்ற நான்கு பேரில் ஒருவரே நீரில் மூழ்கியதாகவும், தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

Image
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில் யானையின் தாக்குதலினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றிரவு(31) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கெபிதிகொல்லாவ - அற்றாவ பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹலீம் முகம்மட் அஸ்வர் (29வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ஆனவிழுந்தான் பிரதான வீதியின் ஊடாக அவரது சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அவரது தோட்டத்திற்கு காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே வந்த யானை தாக்கிய நிலையில் அருகிலுள்ள கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.

Image
ஹொரொவ்பொதானை நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமையப் பெற்றுள்ளதே கிவ்லேகட கிராமம். இக்கிராமத்தில் ஆசிரியர்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், அரச திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என பல தரப்பட்டோர் வாழ்கிறார்கள்.  நாட்டில் ஏற்பட்டிருகின்ற ஒரு அசாதாரண அச்சமான சூழ் நிலையால் மக்கள் ஒன்று கூடுவதனை சுகாதார பாதுகாப்பு நலன் கருதி அரசு தடைவிதித்துள்ளது. இது அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த சகல தரப்பினருக்கும் பொதுவானது. இது பற்றி சகல கலாசார திணைக்கலங்களும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகளுக்கும் தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளன. இதனடிப்படையிலேயே மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், மக்தப் பிரிவுகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மூடப்பட்டிருந்தன. அனேக நாடுகளிலும் இதுவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்த பிறகு மற்றும் தளர்த்திய பிறகு எவ்வாறு நடக்க வேண்டும் என்று பொலீஸ் மற்றும் MOH ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை மீறுவது யாராக இருந்தாலும் தவறே. இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் கட்டுப்பட்டு

கொரோனா வைரஸ்: ஹொரவபொத்தான பிரதேச செயலாளரின் முக்கிய அறிவித்தல்

Image
கொரோனா வைரஸ் காரணமாக ஹொரவபொத்தானை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, அந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரணம்  சேகரித்து விநியோகிக்க  ஹொரவபொத்தான பிரதேச செயலகம் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. உலர் உணவுகளை வழங்குவதற்கு இந்த பகுதியின் மக்கள் நலன் விரும்பிகள் பங்களிக்க முடியும் என்பதை நான் தாழ்மையுடன் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள்: உலர் உணவுகள் அரிசி, சீனி, தேயிலை, பயறு, செமன், பற்பசை, சோப்பு... உதவி செய்ய விரும்புவோர் வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கும் வகையில் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பிரதேச செயலாளர், ஹொரவபொத்தான.